குடும்பத்தைக் கஷ்டத்தில் இருந்து மீட்பதற்காக சின்னம் சிறிய பெண்ணாக சவுதிக்கு சென்ற ரிசானாவுக்கு நேர்ந்தது போன்ற கொடூரம் உலகில் யாருக்கும் நிகழக் கூடாது.
கழுத்தை வெட்டி கயவர்கள் கொல்லும் தினம் வரை தனக்கு நேரப் போகும் கொடூரத்தை பற்றி அறியாதவராக இருந்திருக்கிறார் ரிஸானா.
தனது வறிய குடும்பத்தை மீட்க சவூதி சென்றவளின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்திருக்கும்…??
தவறேதும் இழைக்காத இந்தப் பெண்ணுக்கு அல்லாவின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடூரத்துக்கு நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.