பாராளுமன்ற உறுப்பினரிடம் சி.சிறீதரனின் எந்தவிதமான அனுமதியும் பெறாமல் திடீரென இராணுவத்தினரும், பொலிஸாரும் வீட்டினுள் புகுந்து சோதனை நடத்தியதுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரையும் கைதுசெய்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் இன்று மாலை 3மணிக்கு இடம்பெற்றிருந்தபோது யாழ்ப்பாணத்திலுள்ள எந்தவொரு ஊடகங்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் தினமுரசு பத்திரிகையாளர்களும், ஈ.பி.டி.பி அங்கத்தவர் றுசாங்கனும் உள்ளேயே இருந்துள்ளதுடன், உள்ளேயிருந்த ஆபாச பட இறுவெட்டுக்களையும், ஆணுறைகளையும் தாம் புகைப்படம் எடுத்துள்ளதாகவும் தனது செய்தி தளத்தில் பரபரப்புச் செய்தியினை வெளியிட்டிருக்கின்றார்.
அன்று மாலை 3மணிக்கு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் நுழைந்து சில நிமிடங்களிலேயே அலுவலகத்திற்குள் றுசாங்கன் சிறப்பு அனுமதியுடன் நுழைந்திருக்கின்றார்.
மேலும் புகைப்படங்களை கூட தான் எடுத்திருப்பதாக அவர் செய்தி வெளியிட்டிருக்கின்றார். எனவே பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் திடீர் சோதனையொன்று நடத்தப்படவுள்ள விடயம் றுசாங்கனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கின்றது.
இதேபோல் ஏனைய ஊடகங்களுக்கு வழங்கப்படாத அனுமதி றுசாங்கனுக்கு மட்டும் வழங்கப்பட்டது எவ்வாறு? யாழ்ப்பாணத்திலுள்ள உதயன், தினக்குரல், வலம்புரி பத்திரிகைகளை ஏற்கனவே அரச தொலைக்காட்சியான டான் தொலைக்காட்சியில் எள்ளி நகையாடும் றுசாங்கன் யாழில் ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பலவற்றுக்கு காரணகர்த்தாவாக இருந்து வருகின்றார் என்ற விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
புலிகளுடைய காலத்தில் புலிகளின் அதி தீவிர ஆதரவாளராக இருந்து றுசாங்கன், 2009ம் ஆண்டின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் அதி தீவிர விசுவாசியாக மாறியிருக்கின்றார். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு மாவட்டத்திலிருக்கும் நற்பெயரை சிதைக்கும் நோக்கில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரினால் இவர் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.
இவ்வாறாக பல நயவஞ்சக செயல்களில் ஈடுபட்ட சந்திரகுமார் எம்.பி தான் செய்த பாவத்திற்கு பரிகாரமாயும் மக்களை ஏமாற்றவும் கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தின் இராஜகோபுரம் அமைக்கும் பணியினை ஆரம்பிப்பதை பார்ப்பதற்கு நகைப்பாய் உள்ளது. ஒரு விடயத்தில் சந்திரகுமார் சிறு பிள்ளையை விட கீழ் மட்டத்தில் உள்ள இவர், என்னவென்றால் சிறிதரன் எம்.பி ஒரு தமிழன் தனும் இச்சமூகத்தை சாந்தவன் என்பதை ஏன் மறந்தது என்பதை விட எம் சமூகத்தை தாழ்த்தி சிங்கள ஏகாதிபத்தியத்தினை குசிப்படுத்தும் வேலைகளை செய்தவர்களை மக்கள் அறிந்துள்ளனர் தமிழருடைய போராட்டங்கள் சிங்களவர்களால் களங்கப் பட்டதை விட தமிழர்களின் தமிழ் எதிரிகளால் அழிவுக்கு சென்றது தான் அதிகம் அதற்கு சந்திரகுமார் நடப்பு நாட்களில் ஒரு நல் உதாரனம் என்றால் மிகையாகாது