Sri Lanka

ரிசானா கொலையில் பின் இலங்கை அரசின் நாடகம் அம்பலம்!

ரிசானா நபீக் சிரச்சேதம் செய்து கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என கூறப்பட்டபோதும் அவர் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் இலங்கை தூதுவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரிசானா நபீக் கொல்லப்பட்ட பின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சவுதியில் உள்ள இலங்கை தூதுவரை உடன் திருப்பி அழைத்ததாக இலங்கை அறிவித்திருந்தது.

எனினும் ரியாதில் உள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாட் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்து வருவதாகவும் அவரை நாட்டு திருப்பி அழைக்கவோ வேறு ஒருவரை நியமிக்கவோ இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Most Popular News