நாமக்கல்லில் நடந்த அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு தமிழ் புலிகள் இயக்கத்தினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ராமதாஸ் புதிதாக உருவாக்கியுள்ள அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டம் இன்று நாமக்கல்லில் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த ராமதாசுக்கு தமிழ் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. கறுப்புக் கொடி காட்டியவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.