ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் கடலூரில் சமூக ஆர்வலர் ஒருவர் தீக்குளித்துள்ளார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரே தீக்குளித்ததாகவும் இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.