இலங்கை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக, இந்தியா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். .
மத்திய அமைச்சர்களான சிதம்பரம், ஜீ.கே. வாசன் மற்றும் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட சிலர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.