முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வழக்குகளை விசாரணை செய்வதற்கு ஒன்பது பேரைக் கொண்ட நீதியரசர் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. நீதியரசர் ஷிரானி திலகவர்தன தலைமையிலான நீதியரசர் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
என்.ஜீ. அமரதுங்க, சலீம் மர்சூக், கே. ஸ்ரீபவன், பீ.ஏ. ரட்நாயக்க, சந்திரா ஏக்கநாயக்க, சத்ய ஹெட்டிகே, பிரியசாத் மற்றும் எஸ்.ஈ. வனசுந்தர ஆகிய நீதியரசர்கள் இந்தக் குழாமில் அங்கம் வகிக்கின்றனர். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிராக நான்கு பேர் நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தீர்ப்பு தொடர்பில் ஒரு வழக்கும், புதிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மற்றுமொரு வழக்கும் n;தாடரப்பட்டுள்ளது. புதிய பிரதம நீதியரசர் நியமனத்திற்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து மனுத் தாக்கல் செய்துள்ளார். ஒன்பது பேர் கொண்ட நீதியரசர் குழாமினால் ஆறு வழக்குகள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.