இலங்கை இராணுவத்திற்கு இந்த ஆண்டு உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். என்று இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இராணுவத்திற்கான உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டங்களில் அளிக்கபடும் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்கப்படும்.
‘தனிப்பயிற்சி , படையணி பயிற்சி, கூட்டு இராணுவ பயிற்சிகள், சர்வதேச பயிற்சி , மொழி பயிற்சி ஆகிய பயிற்சிகளே அதிகரிக்கப்படும் என்றார்.