யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியரான சிவசங்கர் கொக்காவில் இராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அநுராதபுரத்தில் வைத்தியராகக் கடமையாற்றும் இவர், இராணுவத்திலிருந்து விலகப் போவதாகத் தெரிவித்த கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அழைத்துக் கொண்டு கொக்காவில் இராணுவ முகாமுக்குச் சென்ற போதே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.
இவரின் கைதின் பின்னணியிலுள்ள உண்மையான தகவல் தற்போது வெளியாகியுள்ளது,
அண்மையில் இராணுவத்தில் இணைக்கப்பட்ட யுவதி ஒருவர் பரீட்சை எழுதுவதற்காக வீடு திருப்பியிருந்த நிலையில், மீண்டும் இராணுவத்தில் இணைந்து கொள்ள விரும்பவில்லை.
இதனை இராணுவத்தினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்த போதும், கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளளது. உடனடியாக மீளவும் இணைந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினர்.
யுவதியின் நியாயத்தை படையினருக்கு எடுத்து விளக்க யுவதியின் பெற்றோர் வைத்தியர் சிவசங்கரின் உதவியை நாடியுள்ளனர்.
அந்த யுவதிக்காகவும் அவரது பெற்றோர்களுக்காகவும் சிவசங்கர் இராணுவ முகாமுக்குச் சென்று பேசி இருக்கிறார். இராணுவத்தினரின் பொறுப்பற்ற பதில்கள் சிவசங்கரை எரிச்சலடையச் செய்ய அவர் அவர்களுடன் கடுமையாக வாக்குவாதப்பட்டார்.
சில மணி நேரங்களின் பின்னர் பெற்றோரையும் யுவதியையும் வீடு செல்ல அனுமதித்த படையினர், வைத்தியர் சிவசங்கரை தடுத்து வைத்து தங்களுடன் கடுமையாக தர்க்கப்பட்டதைச் சாட்டாக வைத்து அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மல்லாகம் பொலிஸாரிடம் கையளித்தார்கள்.
சிவசங்கர் மனநலம் பாதிக்கப்பட்டதற்கான அத்தாட்சிக் கடிதத்தை வடக்கில மனநலத்துறையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவரிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.