மாகாணசபைகளுக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கான பரந்தளவிலான நடவடிக்கைகைள சிறிலங்கா அரசாங்கம் எடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வருடம் பெரும் சவாலாக கடந்துள்ள போதிலும் இந்த ஆண்டில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மாகாணசபைகளின் அதிகாரங்களை பரந்தளவில் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மாகாணசபைகளின் வசமுள்ள காவல்துறை அதிகாரங்களில் மாற்றங்களை செய்ய வேண்டுமானால் அதுபற்றிய சட்டத்திருத்த யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, ஒன்பது மாகாணசபைகளிலும் அதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் பெரும்பாலும் வரும் ஏப்ரல் மாதத்தில், மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடமாகாணசபைக்கான தேர்தலை வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னதாக நடத்துவதாக அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.