Sri Lanka

தமிழ்க் கூட்டமைப்பு நீதிமன்றில் ஆஜராகும்! – சுமந்திரன் MP தெரிவிப்பு

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை நாளை 3 ஆம் திகதி நடைபெறுகின்றபோது நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கூட்டமைப்பின் சார்பில் நான் ஆஜராகுவேன் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச தரப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினரும் நாளை நீதிமன்றில் ஆஜராகமாட்டோம் என்று இன்று அறிவித்துள்ளனர்.

Most Popular News