Sri Lanka

சிறீலங்காவை அதிரவைக்கும் தாக்குதலுக்கு புலிகள் தயார்ப்படுத்தல்?

தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கை ஒன்றிற்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் சில சிறீலங்கா குற்றத் தடுப்பு பிரிவுப் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தெரியவருவதாவது,
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அதிகாலை தொம்பே பிரதேசத்தில் உள்ள தனது காணிக்கு சென்றிருந்த போது, பியகம விலேஜ் என்ற விடுதியின் உரிமையாளர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பியகம விலேஜ் என்ற விடுதியின் உரிமையாளர் பேர்னாட் ஜயரத்ன வெட்டிக்கொலை செய்யப்பட்ட தொம்பே பிரதேசத்தில் உள்ள காணியில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள் உட்பட ஆயுத தொகையொன்றை இந்த கொலை தொடர்பாக விசாரணை நடாத்திவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த காணியில் உள்ள வீடு ஒன்றிற்கு பின்புறம் மிகவும் பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கிலோ எடை கொண்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், வெட்டு கத்திகள் இருந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இங்கு மீட்கப்பட்டு இரண்டு கைக்குண்கள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் கைக்குண்டுகள் எனவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

பியகம விலேஜ் விடுதி உரிமையாளரின் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் அண்மையிலேயே குறித்த காணியில் புதைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. ஆயினும், ஒரு அதிர்ச்சிகர தாக்குதலை சிறீலங்கா தரப்புகளே நடாத்திவிட்டு, அதனை விடுதலைப் புலிகளின் தலையில் போட்டு, தமிழர்களின் மீள் எழுச்சியை தடுப்பதே சிங்களத்தின் இரகசிய நிகழ்ச்சி நிரல் என்று பரிஸ்தமிழ்.கொம்மின் கொழும்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Most Popular News