தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கொண்ட வீடியோ காணொளியைத் தனது கைத்தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி, அலவத்துகொடையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது கைத்தொலைபேசியில் விடுதலைப் புலகளின் செயற்பாட்டைக் கொண்ட நான்கு நிமிடங்கள் காட்சிப்படுத்தக் கூடியதான காணொளி காணப்பட்டுள்ளது.
42 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் கோணங்களிலும் விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.