Sri Lanka

2006 திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட 5 மாணவர்கள்! 7 ஆண்டுகள்

திருகோணமலையில் 2006ம் ஆண்டு 5 தமிழ் மாணவர்களை, இலங்கை இராணுவம் ஈவு இரக்கம் இன்றி சுட்டுக்கொன்றது பலருக்கு நினைவிருக்கலாம். இவர்களது பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் 7 வது நினைவு தினத்தை ஆழ்ந்த சோகத்தோடு அனுஷ்டித்துள்ளார்கள். கொல்லப்பட்ட மாணவர்கள் சம்பவ தினமான ஜனவரி 2ல், திருகோணமலைக் கடற்கரையில் உட்காந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அங்கு வந்த கடற்படையினர் அவர்களை அனைவரையும் சுட்டுள்ளார்கள். மருத்துவர் மநோகரன் அவர்களின் மகனும் இதில் கொல்லப்பட்டார். அவரது மகனின் உடலில் 5 துப்பாக்கி ரவைகள் காணப்பட்டதாக அவரே பொலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். ஆனால் இலங்கை கடற்படையினரோ, கொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஒரு குண்டுவெடிப்பில் இறந்ததாக நீதிமன்றில் தெரிவித்தனர். மருத்துவர் மநோகரன் அவர்களின் வாக்குமூலத்தால், நீதிமன்றில் தமக்கு பாதகமான சூழல் ஏற்படலாம் என்று கருத்திய படையினர் அவரை அச்சுறுத்த ஆரம்பித்தனர்.

இதனால் அவர் அமெரிக்கா செல்லவேண்டி நேர்ந்தது. 7 வருடங்கள் ஆகியும் இவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கொல்லப்பட்ட தன் மகனுக்கு நீதிவேண்டு மருத்துவர் மநோகரன் அவர்கள் அமெரிக்காவில் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். சர்வதேச மன்னிப்புச் சபையுடன் அவர் இணைந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறார். இந் நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு காணொளியை வெளியிட்டுள்ளது. அத்தோடு அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது

Most Popular News