வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இன்று முதல் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய அரசாங்க தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படும் 300 பேர் நாளாந்தம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டிற்கு வருவதற்காக நேற்றைய தினம் வரையில் 66 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.