யுத்தத்தின்போது பெரும் வீரர்களாகவும் தனவந்தர்களாகவும் சித்தரிக்கப்பட்ட பலரது வாழ்க்கை இன்று யுத்தம் முடிந்தகையோடு புரட்டிப்போடப்பட்டுள்ளது.
அந்தவகையில் யுத்தகாலத்தில் பெரும் யுத்த வீரராக பலராலும் போற்றப்பட்ட சாரங்க என்ற நபர் தற்பொழுது மீன் வியாபாரியாக உலா வருகிறார்.
யுத்த வெற்றியின் ஒன்பது வருடகால கொண்டாட்டங்கள் கடந்துள்ள நிலையில் இந்த வெற்றிக்கு தன் உயிரைப் பணயம் வைத்து யுத்தக் களத்தில் போரிட்ட இராணுவத்தினரில் முக்கியமானவர் இராணுவவீரர் சாரங்க. அவர் இன்று கலேவெல மாத்தளை சந்தியில் மீன் வியாபாரியாக தனது ஜீவனோபாயத்தை கொண்டுசெல்கிறார்.
2004 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சாரங்க 6 மாத கால ஆரம்ப இராணுவ பயிற்சியை பூஸா இராணுவப் பயிற்சிக்கல்லூரியில் பெற்றுள்ளார்.
பின்னர் 2006 ஆம் ஆண்டு 800 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் வெற்றிகரமாக இராணுவப் பயிற்சியை முடித்த 138 பேரில் ஒருவராக சாரங்கவும் வெளியேறினார்.
தனது இராணுவ வாழ்க்கைப் பயணத்தை தொப்பிகலை தாக்குதலில் முதல் முதலாக ஆரம்பித்தார்.