முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கிய நிலையில் தனது அரசியல் பயணத்தை அவர் தொடர்வார் என ரோஹன லக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றுக் கொண்ட புதிய வெற்றியை மிகவும் அர்த்தமுள்ளதாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு வருவதா இல்லையா என்பது தொடர்பில் கூற முடியாது.
தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாப்பதாக கூறி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட சிலர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
எனினும் மக்கள் அதற்கு உரிய பதிலை வழங்கியுள்ளனர்.
அத்துடன் கட்சியின் ஒழுக்க நெறியை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மைத்திரியை பாதித்த சில விடயங்கள்...