பலஸ்தீன காஸா பிராந்தியத்தில் தாயொருவருக்கு வேறான தலைகள், இருதயங்கள், நுரையீரல்கள் சகிதம் வயிற்றுப் பகுதி ஒட்டிய நிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை பிறந்த இந்த அபூர்வ இரட்டைக் குழந்தைகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டிருந்தன.
அதேசமயம் மேற்படி குழந்தைகள் காலொன்றை தம்மிடையே பங்கீடு செய்துள்ளன. இந்நிலையில் இந்த இரட்டைக் குழந்தைகளின் சிக்கலான உடல் நிலை காரணமாக அந்தக் குழந்தைகளை வேறாகப் பிரிப்பதற்கு காஸாவில் போதிய மருத்துவ வசதியோ, மருத்துவத் தொழில்நுட்பமோ இல்லாததால் அந்தக் குழந்தைகளை அமெரிக்கா, சவூதி அரேபியா அல்லது இஸ்ரேலுக்கு அனுப்பி சிகிச்சையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகள் முக்கிய உடல் உறுப்புகளை தம்மிடையே பங்கீடு செய்யாததால் அவற்றின் உடல் நலம் உறுதியாக உள்ளதாக காஸாவிலுள்ள ஷிபா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ கலாநிதி அபு ஹம்டா தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இவ்வாறு, காஸாவில் உடல் ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.